Posts

Showing posts from September, 2011

தமிழர் திருவிழா - ஜெமினிக்கு அஞ்சலி

Image
காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு, அவர் நடித்த படங்களின் சுவையான காட்சிகள், நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள், வாழ்நாள் சாதனை முதலியவை ஆவணப்படமாக பெரிய திரையில் திரையிடப்பட உள்ளது இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன் நாள் : சனிக்கிழமை 9.10.2011 நேரம் : மாலை 8.00 மணி ஜெமினி கணேசனின் வாழ்க்கைக் குறிப்பு தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ்மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "காதல் மன்னன்" என்றே அழைத்தனர். இந்நிலையில் அவருடைய தபால்தலை வெளிவந்திருப்பதும் அவர்தம் கலைத் திறனுக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. அவரைப் பற்றிய சில சுவையான செய்திகள் சிலஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேஷ் என...

தமிழர் திருவிழா - துவக்கவிழா

Image
பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர் திருவிழா துவக்கவிழா நிகழ்ச்சியில் இலக்கியச் சித்தர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் கலந்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக உள்ளாட்சி மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அவரது பஹ்ரைன் வருகை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்தேதி சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும். துவக்கவிழா பட்டிமன்ற நடுவராக கவிஞர் நந்தலாலா பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார். நாள் : 7.10.2011 இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன் நேரம் : மாலை 6.30 மணி

பட்டிமன்றம்

Image
பாரதி தமிழ்ச்சங்கம் பெருமையுடன் வழங்கும் தமிழர் திருவிழா நாள் : 07.10.2011 இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன் பட்டிமன்றம் தலைப்பு: கணவன்மார்கள் சந்தோஷமாக இருப்பது விட்டிலா? வெளியிலா? பட்டிமன்ற நடுவர் : கவிஞர் நந்தலாலா கவிஞர் நந்தலாலாவைப் பற்றி சில வரிகள் : கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவர் என இலக்கிய தளத்திலும், சமூக தளத்திலும் தனது தடங்களை ஆழப்பதித்து வருபவர் கவிஞர் நந்தலாலா. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை, இலக்கிய இரவுக்காக தமிழகம்தோறும் சென்று, தனது இனிய உரைவீச்சால் இலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சங்களை வசீகரித்து வருபவர். இளங் கவிஞர்களை இனங்கண்டு அவர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்துவதையும், அவர்களின் கவிதைகளை மேற்கோள் களாகத் தனது உரையில் குறிப்பிட்டு அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதையும் ஒரு குறிக்கோளாகக் கொண்டுள்ளவர். நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டும் என்ற முனைப்போடு இலக்கியப்பணி ஆற்றி இரவுவலம் வருகிற கவிஞர். அவரெழுதிய கவிதையொன்றில் பெண்ணினத்தின் மீதுள்ள நியாயமான கோபத்தின் வெளிப்பாடு நாம் காண முடிகிறது. "ஓ ...

கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி

Image
பாரதி தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும் கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி நாள் : 8 அக்டோபர் 2011 இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன் நேரம் : மலை 7.00 மணி வாய்ப்பாட்டு : திருமதி சங்கீதா ராம்பிரசாத் மிருதங்கம்: திரு. கிருஷ்ணகுமார் வயலின் : திருமதி அர்ச்சனா கிருஷ்ணகுமார் மோர்சிங் : திரு பால கிருஷ்ணன் T.S. Tamil Classical Music Concert by Sangeetha Ram Prasad at Indian Club Time : 7.00 p.m. About Sangeetha Ram Prasad : She has 20 years of association in the divine art of Classical Carnatic music. Born in a family with a traditional carnatic music background she started learning vocal music from her mother Mrs Revathi Srinivasan, a graded Veena artist working with All India Radio, Chennai. Also, she learnt from her grand mother Chellam Rajagopalan who is also a Veena artist. She took her training initially from Mrs Rajalakshmi, student of Sangeetha Kalanaidhi Sri D.K. Jayaraman. Later, she took intensive training from her Guru Sangeetha Kalanidhi Sri T.M. Thyagarajan for 6 years. She gave her firs...

தமிழர் திருவிழா

Image
தமிழர் திருவிழா (ஒரு வார சிறப்பு நிகழ்ச்சிகள்) துவக்க விழா நிகழ்ச்சி நிரல் முக்கிய விருந்தினர் : இந்தியத் தூதுவர் மாண்புமிகு மோகன் குமார் சிறப்பு விருந்தினர் : திரு.தாமோதரன் (நிர்வாக இயக்குனர் அனைத்துலக ஆயுள் காப்பீட்டுக் கழகம் - பஹ்ரைன்) இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன் நாள் : 7.10.2011 வெள்ளிக் கிழமை நேரம்: மாலை 6.30 பட்டி மன்றம் "கணவன்மார்கள் சந்தோஷமாக இருப்பது வீட்டிலா? வெளியிலா?" பட்டிமன்ற நடுவர் : கவிஞர் நந்தலாலா வீட்டிலே... திருமதி. வித்யா சத்யன் திருமதி. பிரேமலதா திருமதி. உம்முல்ஹசனா கபீர் வெளியிலே... திரு.அப்துல் கையூம் திரு.சரவணன் திரு.முகம்மது சலீம் இலக்கியப் பேருரை தலைப்பு : "அந்த நாள் எந்த நாளோ?" இலக்கியச் சித்தர் நாஞ்சில் சம்பத் M.A., M.Phil இவர் தமிழக இலக்கிய அரங்கில் முக்கிய பேச்சாளராகவும் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக சிறந்த பேச்சாளராகவும் இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகம் இவருக்கு "இலக்கியச் சித்தர்" என்ற பட்டத்தையும், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம் இவருக்கு 'நர்த்தன சொல் நாயகன்' என்ற பட்டத்தையும் அளித்து கெளரவித்தது. இவர் எழுதிய நூல்கள...