Showing posts with label Tamil Festival. Show all posts
Showing posts with label Tamil Festival. Show all posts

Tuesday, October 18, 2011

Marvellous Victory in Cricket Match

விளையாட்டுச் சாதனை


அக்டோபர் 7 முதல் 14-ஆம் தேதி வரை பஹ்ரைனில் கோலாகலமாக நடைபெற்ற தமிழர் திருநாளின் ஓர் அங்கமாக, கடந்த வியாழக்கிழமை 13-ஆம் தேதி இந்திய சங்கம் திறந்தவெளி மைதானத்தில் "சென்னைக்கு விசில் போடு" என்று அறியப்பட்ட 20-20 மட்டை விளையாட்டுப் போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

"மும்பை இந்தியன்ஸ்" என்ற பெயரில் இந்திய சங்க கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும், "சென்னை சூப்பர் கிங்ஸ்" என்ற பெயரில் பாரதி தமிழ்ச் சங்க காளையர்களும் களமிறங்கினார்கள்.

பெரும் ஆர்பரிப்புக்கும், எதிர்பார்ப்புக்குமிடையே நடைபெற்ற இந்த போட்டியைக் காண பஹ்ரைன் நாட்டின் எட்டுத்திக்குகளிலும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் காட்டாற்று வெள்ளம் போல் வந்து குழுமியிருந்தனர்.

10 ஓவர்கள் வீதம் இரண்டு இன்னிங்ஸ் விளையாடப்பட்டது.

விவேக் தலைமையில் "மும்பை இந்தியன்ஸ்" அணியும், சிராஜ் தலைமையில் "சென்னை சூப்பர் கிங்ஸ்" அணியும் விளையாடினார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கி மட்டையை கரம் பிடித்தனர். 46 ரன்கள் எடுத்து அனைவரும் ஆட்டம் இழந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியது. எதிர்ப்பார்த்த அளவு நம் வீரர்களின் மட்டை வீச்சு போதுமானதாக இல்லை. துவண்டுப்போன தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கார்த்திக்கின் மட்டை வீச்சு அமர்க்களமாக இருந்தது. இன்னிங்ஸ் முடியும் தறுவாயில் மளமளவென்று ரன்களை குவித்தார் கார்த்திக். இரண்டு சிக்ஸர்கள் (6), ஒரு பவுண்டரி (4). என்று அவரது அசாத்திய திறமை ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

இரண்டாவது இன்னிங்ஸ்ஸில், மும்பை இந்தியன்ஸ் 14 ரன்கள் பின்தங்கி இருந்தார்கள். 39 ரன்கள் மட்டுமே பெற்று அனைவரும் ஆட்டம் இழந்திருந்தனர்.

கடைசியாக களமிறங்கிய நம் வீரர்களுக்கு வெற்றி வாய்ப்பைத் தழுவ 10 ஓவரில் வெறும் 26 ரன்களே தேவைப்பட்டது. அட்டகாசமாக விளையாடிய நம் சங்க மறவர்கள் 7.2 ஓவரிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை - இரண்டு விக்கெட் கையிருப்புக்கு - இலகுவாக எட்டிப் பிடித்தனர்.

பாரதி தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த ரெமி சிறந்த பந்து வீச்சாளராகவும், காத்திக் சிறந்த மட்டை விளையாட்டு ஆட்ட நாயகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சங்கத்துக்கு சிறப்பு சேர்த்தனர்.

நமது வீரர்கள் மீண்டும் வெற்றிக்கனியை பறித்து முத்துத்தீவில் மிகச் சிறந்த ஆட்ட அணிகளில் ஒன்றாக தாமும் முதலிடத்தில் இருப்பதை நிரூபித்தது தமிழ் விளையாட்டு ரசிகர்களை ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க வைத்தது.








Monday, October 10, 2011

சொக்குதே மணம்


13.10.2011 அன்று நடக்கவிருக்கும் சொக்குதே மணம் சமையல் செய்முறை மற்றும் சமையல் போட்டி நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்

கவிஞர் நந்தலாலாவுக்கு நினைவுப்பரிசு




அக்டோபர் 8-ஆம்தேதி தமிழிசை கச்சேரியைத் தொடர்ந்து 'பாட்டுக்கோர் புலவன்' பாரதியைப் பற்றியும் தமிழிசையின் தொடக்கம், தொய்வு, வளர்ச்சியின் வரலாற்றை சிறப்புற சொற்பொழிவாற்றிய கவிஞர் நந்தலாலாவுக்கு பாரதி தமிழ்ச்சங்க நிர்வாகிகள் நினைவுப்பரிசு வழங்கியபோது எடுத்த படம்.

Saturday, October 8, 2011

நந்தலாலாவின் பட்டிமன்றம்




நேற்று வெள்ளிக்கிழமை கவிஞர் நந்தலாலாவின் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தேறியது. 900-க்கும் மேற்பட்ட தமிழ் ரசிகர்கள் பெருந்திரளாக வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்