Sunday, September 16, 2018

“கோடை கொண்டாட்டம்”




பாரதி தமிழ்சங்கம் பெருமையுடன் வழங்கும் “கோடை கொண்டாட்டம்”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு “கோடை கொண்டாட்டம்” என்ற இன்னிசை நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018 அன்று இந்தியன் கிளப் உள்ளரங்கில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

பாரதி தமிழ் சங்கத்தின் சிறப்பான கலைஞர்கள் இதில் கலந்துக் கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். பாடகர்கள் ஜாபர் சாதிக், ரவிச்சந்திரன், ஹாஜி பால், மூவேந்தன், ஹரிஹரன், நிதால் ஷம்ஸ், ஹான்ஸன், கோபி, இவர்களோடு பாடகிகள் அபி ராம், சுருதி முரளி, பவித்ரா பத்மகுமார் மற்றும் ரோஷினி ரெஜி கலந்துக்கிண்டு இன்னிசை மழை பொழியவிருக்கிறார்கள்.

காலாத்தால் அழியாத பழைய பாடல்களும், இசைஞானி இளைய ராஜாவின் மனத்தை வருடும் ராகங்களும், துள்ளல் இசையுடன் கூடிய புதுப்பாடல்களும் ரசிகர்களின் உள்ளத்தை அள்ளும் என்பது திண்ணம்.

நிகழ்ச்சி சரியாக மாலை 6.30 மணிக்குத் தொடங்கும். அனுமதி இலவசம்  

    



No comments: