Posts

Showing posts from December, 2015
https://www.youtube.com/watch?v=fS9fE5X5Jxg

2016 பொங்கல் விழா

Image
எதிர்வரும் ஜனவரி திங்கள் 15-ஆம் தேதியன்று பாரதி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பஹ்ரைன் இந்தியன் கிளப் அரங்கில் மாலை 7 மணிக்கு மாபெரும் இலக்கியச் சொற்பொழிவு நடைபெறவுள்ளது. தமிழுணர்வு கொண்ட அனைவரும் திரளாக வந்திருந்து நிகழ்ச்சியினை சிறப்பிக்க வேண்டுகிறோம். (அனுமதி இலவசம்) முனைவர் பர்வீன் சுல்தானா பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், பெண்ணியவாதி, சமூக ஆர்வலர் எனப் பலவாறாக அறியப்படுபவர் உலகெங்கும் பயணம் செய்து கன்னித்தமிழின் பெருமையை தமது கனல் தெறிக்கும் பேச்சின் மூலம் நிலைநாட்டி வருபவர் சென்னை நீதிபதி பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரியில்  தமிழ்த்துறை துணைபேராசிரியராக பணியாற்றிவரும் முனைவர்  பர்வீன் சுல்தானா, கம்பன் விழா , பட்டிமன்றம், சுழலும் சொற்போர், வழக்காடு மன்றம் போன்ற நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு கம்பன் புகழ்பாடி தன் தமிழாற்றலை தரணியெங்கும் தடம்பதித்து வருகின்றார். ஒவ்வொரு மேடையிலும் சமூக விழிப்புணர்வுடன் கூடிய இலக்கிய உரைகளை ஆற்றிவரும் இவர், தனது கணவர் நடத்திவரும் தமிழியல் ஆய்வு நிறுவனத்திற்காக ஆய்வேடுகளை புத்தகமாக்கும்...