Posts

Showing posts from May, 2010

தொழிலாளர் தின கொண்டாட்டம்

Image
23, மே - மனாமா, பஹ்ரைன். பஹ்ரைன் நாட்டின் தமிழர்கள் நலன் காக்கும் அதிகாரப்பூர்வமான அமைப்பான பாரதி தமிழ்ச்சங்கம் மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் தினம், கடந்த வெள்ளிக்கிழமை 21-ஆம் தேதியன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஈஸா டவுன் இந்தியப் பள்ளி அரங்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சொகுசுப் பேருந்தில் அழைத்து வரப்பட்ட 1500 -க்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். பன்னீர் தெளித்து, சந்தனம், கற்கண்டு, வழங்கி தமிழ்க் கலாச்சார முறையில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள் கையாலேயே குத்துவிளக்கு ஏற்றப் பட்டு அவர்களுக்கு முதல் மரியாதை அளித்து நிகழ்ச்சி தொடங்கப்பட்ட விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தியத் தூதுவர் மேதகு டாக்டர் ஜார்ஜ் ஜோஸப் அவர்கள் முக்கிய விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். பஹ்ரைன் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முன்னாள் முதன்மைச் செயலர் மாண்புமிகு மஹ்மூது அல் மஹ்மூது கெளரவ விருந்தினராக கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். ஏராளமான பரிசுப் பொர...